ரணில் ஜப்பான் நோக்கி நாளை பயணம்

188 0

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் நோக்கி நாளை பயணமாகவுள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஜிங் ஷோ அபேவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த விஜயம் அமையவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.