தமிழர் விடுதலைக் கூட்டணியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும்- வி.ஆனந்தசங்கரி(காணொளி)

269 0

தமிழர் விடுதலைக் கூட்டணியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணையுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் தமது ஆதரவாளர் மத்தியில் உரையாற்றும் போது இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரும் தலைவர்களாகிய தந்தை செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், தொண்டமான் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக்கூட்டணியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னாள் சகல இயக்கத்தினரும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தமிழரசுக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள், பாரளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் அனைவரும் அக்கட்சிகளிலிருந்து விலகி தமிழர் விடுதலை கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்புத் திட்டமானது தென்னாபிரிக்க அரசியல் அமைப்பிற்கு ஏற்ப உருவாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.