வவுனியாவில் காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

37 0

காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் வவுனியாவில் இன்று (24) இடம்பெற்றது.

வவுனியா காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தலைமையில் வைத்தியசாலை பின்வீதியில் அமைந்துள்ள மார்பு நோய் சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் ‘ஆம் எங்களால் காசநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்’ எனும் தொனிப்பொருளில் உலக காசநோய் தினமான இன்று (மார்ச் 24) விழிப்புணர்வு கருத்துரைகள் இடம்பெற்றன.

அதன் பின்னர், அங்கிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது.

இந்த ஊர்வலம் கண்டி வீதிக்கு சென்று, அங்கிருந்து பண்டாரவன்னியன் சதுக்கத்தை அடைந்து, மன்னார் வீதி ஊடாக குருமன்காடு சந்தி, புகையிரத வீதி ஊடாக வவுனியா நகர், அங்கிருந்து பசார் வீதி ஊடாக ஹொரவப்பொத்தானை வீதிக்கு சென்று, வைத்தியசாலையில் நிறைவடைந்தது.

இந்த ஊர்வலத்தில் காசநோய் கட்டுப்பாட்டு பிரிவு வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய மாணவர்கள் ஆகியோருடன் முச்சக்கர வண்டிகளும் விழிப்புணர்வு பதாதைகளை தாங்கியவாறு ஊர்வலமாக வலம் வந்தன.