கஞ்சா விற்பனைக்கு முயற்சி: காரைநகர் கடற்படை புலனாய்வாளர்கள் இருவர் கைது!

29 0

காரைநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய  முயன்ற இரண்டு கடற்படை புலனாய்வாளர்களுடன் சந்தேக நபர் ஒருவர்  நேற்று சனிக்கிழமை (23)  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்படை முகாமில் கடமையாற்றி வரும் குறித்த இரண்டு கடற்படை புலனாய்வானார்களும், காரைநகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்குக் கஞ்சாவை  விற்பனை செய்வதற்கு முயன்றுள்ளனர் .

இந்நிலையில்  பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்  அடிப்படையில் கஞ்சாவினை விற்பனை செய்ய முயன்ற கடற்படை புலனாய்வாளர்கள் இருவரையும், கஞ்சாவை வாங்க முயன்ற சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 1 கிலோ 340 கிராம் நிறையுடைய  கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன்    மேலதிக விசாரணைகளின் பின்னர் இவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.