நுவரெலியா நல்லதண்ணி நகரத்தில் பகல் வேளைகளில் வீதி விளக்குகள் ஒளிர்வதாக பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்று பிற்பகல் 1.00 மணியளவில் நல்லதண்ணி நகரின் சில வீதி மின் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்ததை, அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வீதி மின் விளக்குகள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித அக்கறையும் எடுப்பதில்லையென கவலை வெளியிட்ட மக்கள், மின்சாரம் வீணாகுவது குறித்து தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ளனர்.