கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது!

16 0

கிளிநொச்சி உருத்திபுரம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைதானார் .

இவரிடமிருந்து  சுமார் 7 கிலோ 25 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி பகுதியை சேரந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இத்துடன், சந்தேக நபர் கேரள கஞ்சாவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.