அனுமதியின்றி பனை மரங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் கைப்பற்றப்பட்டது!

20 0

அனுமதியற்ற சட்ட விரோத பனைமரங்களை  ஏற்றிய கெப் ரக வாகனத்துடன் சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் விசேட குற்ற புலனாய்வுப் பிரிவினரால்  நேற்று சனிக்கிழமை (23)  கைதானார் .

குறித்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் பனை மரங்களை கெப் ரக வாகனத்தில் கடத்துவது தொடர்பில் பொலிஸ் புலனாய்வு குழுவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தையடுத்து இவர் கைது செய்யப்பட்டார் .

இந்நிலையில்,  கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் பனை மரங்களை கடத்திய நிலையில்  விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டதுடன் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது .

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு  வருவதுடன் சந்தேக நபரை  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.