அனுமதியற்ற சட்ட விரோத பனைமரங்களை ஏற்றிய கெப் ரக வாகனத்துடன் சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் விசேட குற்ற புலனாய்வுப் பிரிவினரால் நேற்று சனிக்கிழமை (23) கைதானார் .
குறித்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் பனை மரங்களை கெப் ரக வாகனத்தில் கடத்துவது தொடர்பில் பொலிஸ் புலனாய்வு குழுவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தையடுத்து இவர் கைது செய்யப்பட்டார் .
இந்நிலையில், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் பனை மரங்களை கடத்திய நிலையில் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டதுடன் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது .
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.