யாழ்ப்பாணம், சிவபூமி முதியோர் இல்லத்தின் 10 ஆவது ஆண்டு விழா(காணொளி)

768 0

யாழ்ப்பாணம், சிவபூமி முதியோர் இல்லத்தின் 10 ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் சுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லத்தின் 10 ஆவது ஆண்டு பூர்த்தி விழா, சிவபூமி முதியோர் இல்ல அறக்கட்டளைத் தலைவர் ஆ.திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக அகில இலங்கை இந்துமா மன்ற தலைவர் கந்தையா நீலகண்டன் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், சிவபூமி முதியோர் இல்ல இளைப்பாறிய கணக்காளர் வை.ஈழலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது சிவபூமி நிழல் எனும் சிறப்புமலர் வெளியிடப்பட்டதோடு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.