வெடுக்குநாறிமலை சம்பவம் – மதசுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது

37 0

வவுனியாவில் சமீபத்தில் இந்து ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் மத மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பில் உள்ளுர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்றுத்தும் வகையில் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களில்  அரசாங்கத்தின் அனுசரணையுடன் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில்இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தி;ற்கு பதிலளித்து உரையாற்றிய பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் அன்ரூ மிட்ச்செல் இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்துவதை இலங்கை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரிட்டன் புதிய இலங்கை தனது சர்வதேச கடப்பாடுகளிற்கு ஏற்ப புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது

 

பிரிட்டனின் அமைச்சர் அன்ரூ மிட்ச்செல மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையின் மனித உரிமை நிலவரம் என்பது பிரிட்டனின் முன்னுரிமைக்குரிய விடயம் அங்கு காணப்படும் நிலைமையை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.

மனித உரிமை விடயங்களில் இலங்கை பிரிட்டனின் முன்னுரிமைக்குரிய நாடு என்பது அங்கு காணப்படும் பல்வேறுபட்ட மனித உரிமை விடயங்கள் குறித்த எங்களின் கரிசனைகளை பிரதிபலிக்கின்றது.

இலங்கையில் சிவில் சமூகத்தினர் தொடர்ந்தும் துன்புறுத்தல்களை அச்சுறுத்தல்களை கண்காணிப்பினை எதிர்கொள்கின்றனர்.

சிவில்தளத்தினை மிகவும் கட்டுப்படுத்துவதை நோக்கி போக்கு குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்,குறிப்பாக கருத்துசுதந்திரத்தை ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.

ஐசிசிபிர் அல்லது பயங்கரவாத தடைச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.மிகவும் கொடுரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விட்டு இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளின் அடிப்படையிலான சட்டத்தை  கொண்டுவரவேண்டும் என நாங்கள் தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை   பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கவேண்டும்  .

இலங்கைஅரசாங்கம் சமீபத்தில் நிறைவேற்றிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்,அது இணையவழி தொடர்பாடலை குறிப்பிடத்தக்க அளவிற்கு   கட்டுப்படுத்தக்கூடிய பலவகையான கருத்துவெளிப்பாடுகளை குற்றமாக்ககூடியதாக காணப்படுகின்றது.

அரசசாபற்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை ஒழுங்குபடு;த்துவதை வலுப்படுத்தும் யோசனைகள் ஒலிபரப்பு ஊடக உத்தேச சட்டமூலங்கள் என்பன சிவில் தளத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

மனித உரிமை குறித்த தடைகள் குறித்த விடயங்களை நாங்கள் ஆராய்;ந்துவருகின்றோம்,ஆனால் நாங்கள்அவற்றை முன்கூட்டியே விவாதிக்கவில்லை,மேலும் நாடாளுமன்றத்திலும் இது குறித்த எங்களின் சிந்தனைகள் குறித்து விவாதிக்கமாட்டோம்

நல்லிணக்கத்திற்கான அடிப்படைகளாக நாங்கள் வெளிப்படைதன்மையையும் பொறுப்புக்கூறலையும் கருதுகின்றது.

இலங்கைஅரசாங்கம் பங்குதாரர்களுடன் முழுமையான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளிற்கு அமைய சட்டங்களை உருவாக்கவேண்டும்.

இலங்கையில் தமிழர்கள் முஸ்லீம்கள் உட்பட பல சமூகத்தினர் அரசஅதிகாரிகளால் ஒதுக்கப்படுதலை எதிர்கொள்கின்றனர் என்பதை இந்த சபை டிசம்பரில் ஏற்றுக்கொண்டிருந்தது.

இது நிலங்கள் தொடர்பான பதற்றங்களை அதிகரித்துள்ளது இது சிலவேளைகளில் மதவழிபாட்டுத்தலங்கள் தொடர்பானதாக காணப்படுகின்றது.

சமீபத்தில் வவுனியாவில் இடம்பெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டலாம்.

இவ்வாறான சம்பவங்கள் நடவடிக்கைகள் மத சுதந்;திரத்தின் நம்பிக்கை மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மட்டக்களப்பில் உள்ளுர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அச்றுத்தும் வகையில் பாரம்பரிய மேய்;ச்சல் நிலங்களில்  அரசாங்கத்தின் அனுசரணையுடன் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்வுகள் இனவாதபதற்றங்கள் மற்றும் இலங்கையின்  வடக்குகிழக்கில் உள்ள தமிழர் பாரம்பரிய நிலங்களில் இருந்து கட்டாய இடம்பெயர்வுகள் குறித்த பதற்றத்தை உருவாக்கியுள்ளன.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் நினைவுகூரலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சம்பவங்களும் உள்ளன.