அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளது!

234 0

அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணையில் செல்ல நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

உண்மையில் நாட்டை ஆட்சி செய்வது யார்..? என்பது தெரியாமல் இருக்கின்றது. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஒருவருக்கு எதிராக நீதிச் சேவை கட்டமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாக குறித்த நீதிபதியை அரசாங்கத்தினால் விலக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டின் தலைவர்களையும், மக்களையும் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியாது. எவ்வாறாயினும், நீதிமன்றின் சுயாதீன தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.