தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ; இளைஞர் பலி!

108 0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (19)  அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்தலயில் இருந்து கொட்டாவ நோக்கிப் பயணித்த வேன் அதே திசையில் பயணித்த கொள்கலன்  ஒன்றுடன் மோதி  விபத்துக்குள்ளானது .

உயிரிழந்தவர் காலி -நாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், வேன் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும்  பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுஞ்சாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.