யூ செங் ஷெங் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து பேச்சுவார்த்தை

307 0

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபைக்கான தேசிய குழுவின் தலைவர் யூ செங் ஷெங் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

சீன அரசியல் உயர் மட்ட அரசியல் ஆலோசகரான யூ செங் ஷெங்குடன் வந்திருந்த உயர் அதிகாரிகள் குழுவும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றிருந்தது.

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான தொடர்புகள் மற்றும் சீனாவால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.