முறைப்பாடொன்று தொடர்பில் வெல்லவாய பொலிஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த மனைவியை , கணவர் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர் வெல்லவாய , மெதகொட பகுதியை சேர்ந்த பெண் ஆவார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கணவரில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரியவ ந்துள்ளது.
இதனையடுத்து இவரின் தந்தை இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இவர் இந்த முறைப்பாடு தொடர்பில் கடந்த 12ஆம் திகதி அன்று வெல்லவாய பொலிஸ் நிலையத்திற்கு சென்றுக்கொண்டிருந்த போது பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள தேநீர் கடையொன்றில் இருந்த கணவர் இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் எல்லை மீறியதில் கணவர் , இவரின் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.