தனியார் பஸ்ஸில் பணப்பையை திருடிய நடத்துனரை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பயணிகள்

96 0

மொரட்டுவை மற்றும் புறக்கோட்டைக்கு இடையிலான இலக்கம் 101 பயணிகள் பஸ்ஸில் பணப்பையை திருடிய குற்றச்சாட்டில் பஸ் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணியொருவரின் பணப்பையை பஸ் நடத்துனர் திருடியதை மற்றைய பயணியொருவர் கண்டு தெரியப்படுத்தியதை அடுத்து நடத்துனரை பயணிகள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

நடத்துனர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், பயணிகளின் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மொரட்டுவை நோக்கி பயணித்த கம்பஹா பகுதியைச் சேர்ந்த பயணியின் பணப்பையே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

இதுபோன்ற முன்பு இடம்பெற்ற சம்பவங்களில் நடத்துனருக்கு தொடர்பு இருக்கலாம் என  சந்தேகிக்கிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.