கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் மூலம் வட மாகாணத்தின் தலைமன்னார் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 230 மி. கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தலைமன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.