கடந்த அரசாங்கம் தொழிலாளர்கள் உரிமையை மீறி அவர்களின் ஊழியர் சேமலாப நிதியை கூட பெற்றுக்கொடுக்க வில்லை என அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
கண்டி -கெலெபொக்க தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

