யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் – மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஐயனார் கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் வீட்டில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே இருவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது.
இன்று காலை உறவினர்கள் அவ்வீட்டுக்குச் சென்றபோதே சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் அப்பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தையொட்டி அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே மின்சாரம் தாக்கியுள்ளதாக விசாரணையில் இருந்து தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

