ETCA உடன்படிக்கை விரைவில் கைச்சாத்து

213 0

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.

அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இந்த உடன்படிக்கை குறித்து இரண்டு தரப்புக்கும் இடையில் ஏற்கனவே பலசுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் இதனை இறுதி செய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வாரங்களில் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

பெரும்பாலும் ஜுன் மாதம் அளவில் இந்த உடன்படிக்கை கைச்சாத்தாக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.