சிரியா மீது 59 ஏவுகணைகளை ஏவியது அமெரிக்கா

231 0

சிரியாவின் வான்படைத் தளம் ஒன்றின் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

மத்தியத்தரைக்கடலில் நிலைகொண்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல் ஒன்றில் இருந்து இந்த ஏவுகணைகள் செலுத்தப்பட்டன.

சுமார் 59 சிறிய ரக ஏவுகணைகள் இவ்வாறு தாக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சிரிய ஜனாதிபதியின் படையினர், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இரசாயனத் தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரிய அரசாங்க படையினருக்கு எதிராக அமெரிக்கா நடத்திய முதலாவது நேரடித் தாக்குதல் இதுவாகும்.