வவுனியாவில் பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

18 0

வவுனியாவில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தனர்.

வவுனியா வைத்தியசாலையில் கடந்த நவம்பர் மாதம் 07 ஆம் திகதி புள்ளி நிறச் சட்டையுடன் வயோதிபப் பெண் ஒருவர் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கான சிகிச்சைகள் வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த வயோதிபப்  பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

சுமார் 5 அடி உயரமுடைய குறித்த வயோதிபப் பெண் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. குறித்த பெண்ணின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள

குறித்த பெண் தொடர்பாக தகவல் தெரிந்தோர் அல்லது உறவினர்கள் வவுனியா வைத்தியசாலையை அல்லது வவுனியா பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.