யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் சட்டத்தரணி புகழேந்திக்கு கௌரவம்

30 0

உயிரிழந்த சாந்தனின் விடுதலைக்காக போராடிய சட்டத்தரணி புகழேந்திக்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கௌரவிப்பு நிகழ்வு, இன்றையதினம் (05.03.2024) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தினால் நடாத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 33 வருடம் சிறைவாசம் அனுபவித்த சாந்தன், விடுதலையாகி நாடு திரும்பவிருந்த நிலையில் உயிரிழந்தார்.

சாந்தனின் விடுதலைக்காக வழக்காடியும் உயிரிழந்த பின் வித்துடலை அவரது சொந்த இடத்திற்கு கொண்டுவந்து சேர்ப்பிக்கவும் சட்டத்தரணி புகழேந்தி பெரும் பங்கேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.