அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று பணிப்புறக்கணிப்பில்

238 0
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இதற்கமை காலை 8.00 மணிமுதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிப்புறக்கணிப்புக்கு நூற்றுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஒன்றிணைந்த இலங்கை மின்சார சபை சேவையாளர்கள் சங்கம் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்பித்த நாடு தழுவிய ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
வேதன பிரச்சினை தீர்க்கப்படாமை மற்றும் ஊழியர்களுக்கு எதிராக ஒடுக்கு முறைக்கு  எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாக சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.