உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்கட்டணங்கள் குறைவடைந்தமையே இதற்கு காரணம் என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கோப்பை தேநீர் மற்றும் ஒரு கோப்பை பால் தேநீர் ஆகியவற்றின் விலைகள் முறையே 5 மற்றும் 10 ரூபாவினால் இன்று (05)இரவு முதல் குறைக்கப்படும்.
மேலும், ஒரு உணவுப் பார்சலின் விலை 25 ரூபாவினாலும் பிரைட் ரைஸ், கொத்து ரொட்டிகளின் விலைகள் 50 ரூபாவினாலும் மற்றும் சிற்றுண்டி (சோர்ட் ஈட்ஸ் ) வகைகளின் விலைகள் 10 ரூபாவினாலும் குறைக்கப்படும்.

