ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய நிரந்தர தொகுதி அமைப்பாளர்கள் நியமிப்பு

314 0

குருநாகல் மாவட்டத்தில் உள்ள 14 தேர்தல் தொகுதிகளில் பதினொன்றுக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய நிரந்தர தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் இடம்பெற்றுள்ள முதலாவது நிரந்தர தொகுதி அமைப்பாளர் நியமனம் இது என்பது குறிப்பிடத்தக்கது