கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும், மஹிந்த சார்பு குழுவினரதும் இருவேறு பாதைகள் என்னவென்பது தெளிவாகும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
மைத்திரிபால சிறிசேன என்பவர் இடதுக்கு பக்கத்துக்கு சமிக்ஞையை காட்டி, வலது பக்கத்துக்கு வாகனத்தைச் செலுத்தியவர். இவ்வாறு வலது பக்கத்துக்கு சென்ற இவரது பயணத்தை திருப்பி எடுப்பது அவ்வளவு கஷ்டமான ஒன்றல்ல.
இந்த மே தினத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இருவழிப் பயணம் தொடர்பில் தெளிவான செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்கவுள்ளோம் எனவும் அமைச்சர் டிலான் மேலும் கூறினார்