தனி சின்னத்தில் மட்டுமே தமாகா போட்டியிடும்: இளைஞரணி தலைவர் யுவராஜா தகவல்

24 0

தமாகா இளைஞரணித் தலைவர்யுவராஜா உதகையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் தமாகா தனது சைக்கிள் சின்னத்தில் போட்டியிட உள்ளது. குறைந்தது 2 தொகுதியில் போட்டியிடுவோம். நாங்கள் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் நெருக்கமாக உள்ளோம். ஆனால், பழக்கம் வேறு, தேர்தல் வேறு.

நாங்கள் மாநிலம் முழுவதும் களப் பணியாற்றி உள்ளோம். எங்களது கோரிக்கைகளை ஏற்று, எங்களை கண்ணியத்துடன் நடத்தும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். கருத்துக் கணிப்புகள் எப்போதும் துல்லியமானதாக இருப்பதில்லை. சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் என்ன நடந்தது?

திமுக மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உள்ளது. இதுமக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெவ்வேறு விதமாக மக்கள்வாக்களிக்கின்றனர்.

மக்களவைத் தேர்தலில் மக்கள் பணத்துக்காக வாக்களிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். மாநிலப் பொது செயலாளர் சரத் உடனிருந்தனர்.