கிருஷ்ணகிரி அருகே பேருந்து-லாரி மோதி விபத்து-7 பேர் உயிரிழப்பு

365 0

201607241515049197_Kirishnakiri-truck-collided-near-the-bus-crash-kills-7_SECVPFகிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சின்னாறு கிராமத்தில் தனியார் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்துவிட்டதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த கோர விபத்தில் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சூளகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். சுமார் 10 ஆம்புலன்ஸ்கள் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளன. பேருந்தின் பெரும்பாலன பகுதிகள் சேதமடைந்துள்ளதால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு எதிரே வந்த பேருந்து மீது மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.