அரசியல் கைதிகளின் விடயத்தில் நீதித்துறை நியாயமானதொரு தீர்வை வழங்க வேண்டும் – ஸ்ரீதரன்

260 0
அரசியல் கைதிகளின் விடயத்தில் நீதித்துறை நியாயமானதொரு தீர்வை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்தார்.
மேல் நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வேதன உயர்வு தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான வாத விவாதங்கள் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இதனிடையே, நீதிமன்ற தீர்ப்புக்களை அமுல்படுத்துகின்ற காவற்துறையினர் இன மொழி பாராது, சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இதேவேளை நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்ற வழங்குகளுக்கான நிறைவான தீர்ப்புக்களை வழங்குவதற்கான ஒழுங்குகள் நடைமுறை படுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகோஸ்வரன் தெரிவித்தார்.