போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்ய வேண்டாம்- மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்(காணொளி)

406 0

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்ய வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்யவோ, கீழான எண்ணம் கொண்டோ நோக்க வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில் உரிமையை உறுதிப்படுத்த மத்திய மாகாண அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆரம்பித்த சத்தியாக்கிரக போராட்டம் 44வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இந்நிலையில் தமது போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு சில சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் எந்த சதித்திட்டம் தீட்டினாலும் தமது உரிமையை பெற்றுக்கொள்ளும் வரை தமது போராட்டம் தொடரும் என்று பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமது உரிமையினைக்கேட்டு போராடிவரும் பட்டதாரிகளை நீதிமன்றம் வரையில் இந்த அரசாங்கம் கொண்டுசென்றுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கம் பிரஜைகள் வீதிகளில் போராட்டங்கள் நடாத்திவருவதை வேடிக்கை பார்ப்பதாகவும் பட்டதாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.