சிசுவொன்றின் சடலம் தணமல்வில மருத்துவமனை கழிவறையில் கண்டுபிடிப்பு!

233 0

கொலை செய்யப்பட்ட சிசுவொன்றின் உடலமொன்று தணமல்வில மருத்துவமனையின் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு மருத்துவமனை ஊழியர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய தணமல்வில காவற்துறையினர் குறித்த சிசுவின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது சிசுவின் தாய் தொடர்பில் தகவல் வௌிவந்துள்ள நிலையில் , அவர் சிறுநீர் தொடர்பான நோய் ஒன்று தொடர்பில் மருத்துவமனைக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போதைய நிலையில் , குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் , காவற்துறை பாதுகாப்பின் கீழ் குறித்த பெண் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.