வீதி விபத்தில் தாய் – தந்தை பலி, புதல்விகள் காயம்

276 0
மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் 86 கிலோமீற்றர் கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.

பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த லொறியொன்றும் எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி ஒன்றும் மோதிக்கொண்டதில் இன்று (04) மாலை இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த அனர்த்தத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் புதல்விகள் இருவர் படுகாயமடைந்த நிலைியல் மனம்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது தந்தையும், தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். புதல்வியர் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மனம்பிட்டிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணைகள் நாளை நடைபெறவுள்ள நிலையில், வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.