மின்சார சேவையாளர் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் போராட்டம்

230 0
இலங்கை மின்சார சேவையாளர் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் நாடுதழுவிய போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
வேதன பிரச்சினை தீர்க்கப்படாமை, ஆட்குறைப்பு போன்ற விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் ரஞ்சன் ஜயலால் இதனைக் கூறியுள்ளார்.
அதேநேரம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் எதிர்வரும் ஏழாம் திகதி நாடுதழுவிய போராட்டத்தை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
 சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.