விஷவாயுவை சுவாசித்த மீனவர் உயிரிழப்பு

141 0

அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகொன்றின் மீன் சேகரிப்பு தொட்டிக்குள் உருவாகியதாகக் கூறப்படும் விஷ வாயுவைச் சுவாசித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விஷ வாயுவினால் பாதிக்கப்பட்ட 8  மீனவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

7 மீனவர்களும்   பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.