புத்தளத்தில் மின்சாரசபை ஊழியர்கள் அமைதி ஆர்ப்பாட்டம்

141 0

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புத்தளம் பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு முன்பாக  ஊழியர்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (07) நண்பகல் 12 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொறியியலாளர்கள், ஊழியர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதுடன் கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் எதிர்பில் ஈடுப்பட்டனர்.

மின்சாரசபை மற்றும் அனைத்து அரசாங்க வளங்களை விற்பதை உடனே நிறுத்து, வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்து, தொழிற்சங்க அடக்குமுறையையும் பழிவாங்கலையும் உடனடியாக நிறுத்து, மக்களின் மின் கட்டணத்தை உடனே குறையுங்கள்! என பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .