கட்டார் நாட்டவர்களை இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கட்டார் வெளிவிவகார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, அந்த நாட்டின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சில பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் ஏ எச்.வன் என்.வன் நோய்ப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே கட்டார் இந்த அறிவுறுத்தலை விடுத்திருக்கிறது.