மகாவலி கங்கையில் நீராடச் சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிந்தகல பகுதியில் உள்ள மகாவலி கங்கையில் நேற்று (03) நீராடச் சென்ற போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன நபரை தேடும் பணியில் பொலிஸாரும் கடற்படையின் உயிர்காப்பு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.