மேலும் 660 பேர் கைது

38 0

யுக்திய சுற்றிவளைப்பில் இன்று (04) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 சந்தேக நபர்களும் குற்றத் தடுப்பு பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 108 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இந்த நடவடிக்கையின் போது 152 கிராம் ஹெரோயின், 134 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 சந்தேக நபர்களில் போதைக்கு அடிமையான ஒருவர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

 

இதன்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 03 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

குற்றத் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் கைது செய்யப்பட்ட 108 சந்தேக நபர்களில் 08 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் 95 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமறைவாகியிருந்த 02 சந்தேக நபர்களும் குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த 03 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.