யாழ். மயிலிட்டி கடலில் ஆபத்தான படகுப் பயணத்தை மேற்கொண்ட இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் மீட்பு

54 0

யாழ்ப்பாண கடற்பகுதியில் ஆபத்தான படகுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர்.

மயிலிட்டி கடல் பகுதியில் கடந்த சனிக்கிழமை (27) குடும்பஸ்தர் ஒருவர் தனது 2 வயது பிள்‍ளையையும், தனது சகோதரியின் 7 வயது மகளையும் படகில் ஏற்றி கடலில் ஆபத்தான முறையில் படகை செலுத்தியுள்ளார்.

அவ்வேளை, படகினுள் கடல் நீர் புகுந்ததுடன், படகில் இருந்த பிள்ளைகளும் பயத்தில் கத்தியுள்ளனர்.

அவர்களது சத்தம் கேட்டு, கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், குறித்த இடத்துக்கு விரைந்து, படகில் இருந்த இரு பிள்ளைகளை மீட்டதுடன், படகினை கரைக்கு செலுத்துமாறு குடும்பஸ்தருக்கு உத்தரவிட்டனர்.

அத்தோடு, குடும்பஸ்தரை கடுமையாக எச்சரித்த கடற்படையினர், இரு பிள்ளைகளையும் பாதுகாப்பாக கரை சேர்த்தனர்.