விமல் வீரவன்ச தொடர்ந்தும் விளக்கமறியலில்

226 0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விமல் வீரவன்சவின் மகளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பிணை வழங்குமாறு கோரி முன்வைத்த மனு இன்று காலை நிராகரிக்கப்பட்டது.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 40 வாகனங்களை முறைக்கேடான முறையில், தமது உறவினர்களுக்கு வழங்கிய குற்றச்சாட்டில், நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் விமல் வீரவன்ச, கைதுசெய்யப்படு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.