சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை கைது

241 0

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் வெலிகம – மிரிஸ்ஸ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே அவர் கைதாகியுள்ளார். மேலும், சந்தேகநபர் வசம் இருந்து 18 சட்டவிரோத சிகரெட் பக்கற்றுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. அவரை இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.