பயாகலை கடற்கரையிலிருந்து 20 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்பு

148 0

களுத்துறை – பயாகலை பிரதேசத்தில் கடற்கரையில் இருந்து இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனின் சடலம் இன்று திங்கட்கிழமை (15) மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 20 வயதுடைய இளைஞராவார்.

இவர் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) தனது பாட்டியின் வீட்டுக்குச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.