கட்சி பொறுப்பேற்றது மக்கள் சேவைக்கே. அன்றி குடும்பத்தினருக்கு அரியனை பட்டாபிசேகம் செய்வதற்கு அல்ல – ஜனாதிபதி

359 0

தாம் கட்சி பொறுப்பை ஏற்று கொண்டது மக்களுக்கு சேவையாற்றவே அன்றி, குடும்பத்தினருக்கு அரியனை பட்டாபிசேகம் செய்வதற்கு அல்லவேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுகததாச மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பை எதிர்பார்க்க வில்லை.

இலங்கையின் ஜனாதிபதி பதவியையும் எதிர்பார்க்க வில்லை.

எனினும் அவை தானாகவே கிடைத்தன.

எந்த வித நிபந்தனைகளும் இன்றி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தம்மிடம் வழங்கியவர்கள்,

கட்சியினை மேம்படுத்துவதற்கு ஏன் இடையூராக நிற்கின்றார்கள் என ஜனாதிபதி இதன் போது கேள்வி எழுப்பியுள்ளார்.

எவர் எவ்வாறான மோசடியில் ஈடுப்பட்டாலும் நாட்டின் நலன் கருதி எந்த வித பாரபட்சமும் இன்றி அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் ஒரு போதும் பின்நிற்க போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.