ஜனநாயகத்தை அதளபாதாளத்திற்கு தள்ளும் வகையில் செயற்பட்டு வருகிறது

220 0

நாட்டில் வாழும் சகல இனங்களின் உரிமைகளை பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தை அதளபாதாளத்திற்கு தள்ளும் வகையில் செயற்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்துவது ஜனநாயகத்தின் சிறப்பம்சம். எனினும் தற்போதைய அரசாங்கம் தேர்தலை நாளுக்கு நாள் ஒத்திவைத்து வருகிறது.இப்படி ஜனநாயகத்தை பாதுகாக்க முடியுமா?. இவற்றை நாம் எதிர்க்க வேண்டும்.

எமக்கு முன்னர் கட்சி ஒன்று இருந்தது. அந்த கட்சி தற்போது பலவீனமடைந்துள்ளது.இதன் காரணமாகவே அனைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து வருகின்றனர் என பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.