ஜெனீவாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை

239 0

ஜெனீவாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில், ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட தனியார்துறை ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் இவ்வாறு ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

செலசினே என்ற நிறுவனம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஊடகவியலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.