அந்தரகொல்லேவயில் மின்சாரம் தாக்கி யானை பலி ; விவசாயி கைது

126 0
அந்தரகொல்லேவ பிரதேசத்தில் உள்ள வயலில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

15 வயதுடைய யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் வீட்டிலிருந்து காணிக்கு சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார கம்பியில் சிக்கியே இந்த யானை உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்தரகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.