பஸ் – முச்சக்கர வண்டி மோதி விபத்து ; முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் பலி ; நால்வர் காயம்

171 0
மிஹிந்தலை பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் அநுராதபுரம் – கலத்தேவ பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான இந்திரசிறி என்ற நபராவார்.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் தனியார் பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த 4 பயணிகள் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.