சமூகத்தை சீரழிக்கத் தூண்டும் நபர்களின் மத நம்பிக்கைகள் குறித்து ஆராய அமைச்சரவை குழு!

22 0

சமூகத்தை சீரழிக்கத்  தூண்டும் நபர்களின் மத நம்பிக்கைகள் குறித்து ஆராய அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மத போதனைகளை திரிபுபடுத்தும் மற்றும் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் செயல்களை தடுக்கவும் அகற்றவும் அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாட்டின் சட்ட கட்டமைப்புக்குள் அனைவரும் அவரவர் மதத்தை கடைப்பிடிக்கும் சூழலை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.