கிழக்கு மாகாணத்தில் காணி உரிமம் வழங்கி வைப்பு!

35 0

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைவாக கிழக்கு மாகாணத்தில் 20 இலட்சம் காணித்துண்டுகளுக்குரிய காணி உரிமம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் காணி உரிமம் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (07) மண்முனை பற்று – ஆரையம்பதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதியின் பணிபுரைக் கமைவாக 20இலட்சம் காணித்துண்டுகளுக்குரிய காணி உரிமம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் நீண்ட காலமாக அரச காணிகளில் குடியிருந்து அவற்றை பராமரிப்பு செய்ததன் காரணமாக அவர்களுக்கு காணி உரிமம் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனைபற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 28 பயனாளிகளுக்கு இதன்போது முதற்கட்டமாக காணி உரிமைம் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனைபற்று ஆரையம்பதி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ரோஜினி விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்

இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணி உரிம ஆவணங்களை வழங்கி வைத்தார்.

பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி கிழக்கு மாகாண சபை  முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன், மற்றும் பிரதேச செயலக காணி  பிரிவு உயர் அதிகாரிகள் பயனாளிகள் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.