பொது சேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டியது அரசின் கடமை: மு.க ஸ்டாலின்

220 0

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வை திரும்ப பெற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சுங்கச்சாவடி கட்டணத்தை 40% மேலாக தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் உயர்த்தியுள்ளது என்றும் மீண்டும் ஒரு கட்டண சுமையை தமிழக மக்கள் தலையில் மத்திய அரசு ஏற்றி வைத்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டன என்றும் தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டணத்தை தவணை முறையில் ஏற்றுவது மக்கள் விரோத செயல் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதற்கெடுத்தாலும் கட்டணம்
பொது சேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டியது அரசின் கடமை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளில் கட்டணம், வங்கிகளில் எதற்கு எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும்  அத்தியாவசிய பொதுசேவைகளுக்கு கூட மக்கள் அத்துமீறிய கட்டணங்களை செலுத்த வேண்டி உள்ளது என்றும் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.