ஜனாதிபதி கிண்ணியா தள வைத்தியசாலைக்குத் திடீர் விஜயம்.

225 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிண்ணியா தள வைத்தியசாலைக்குத் திடீர் விஜயம் மேற்கொண்டார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த திடீர் விஜயம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வைத்தியசாலையினைப் பார்வையிட்டதுடன் அதன் தேவைப்பாடுகளைக் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் வைத்தியசாலையினை ‘பி’ தரத்திலிருந்து ‘ஏ’ தரத்திற்கு தரமுயர்த்தக் கோரி 5வது நாளாக கிண்ணியா ‘டி’ சந்தியில் அமைதிப் போராட்டம் நடாத்தியவர்களையும் ஜனாதிபதி சந்தித்தார்.

மிக விரைவில் அவர்களின் கோரிக்கைகள் நிறைவு செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ட்ரின் பெர்நான்டோ, முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.